தவற விட்ட பயணச்சீட்டு

பேருந்து பயணத்தில்
வேண்டுமென்றே உரசியவனை
வேகத்தில் முறைத்தும் வைத்தாள்
வேதனையை மறைத்தும் வைத்தாள்
மடித்த புடவை மடிப்பினை
மறைக்குமிடம் அனுப்புமுன்
முதுகினில் முத்தமிட்டே முன்புறம்
உதவும் கையினை நினைத்துவிட்டாள்
தனை அணைக்க தானில்லை
பொங்கியது போதுமென
அடுப்பினில் வெந்த பாலை
அமைதியாய் அனைத்து வைத்தாள்
பெற்றவரின் பெருமையை நினைவிலேற்றி
ஒற்றை கடிதமதை நிராகரித்து
உரிய வரனின்று அமையாமல்
ஊமையாய் அழுது வைத்தாள்


2 Comments:
திருமணமாகாத பெண்ணைப்பற்றியதா கவிதை...!
காதலை தவற விட்ட...திருமணமாகாத...பெண்ணின் கதை...
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home