Monday, June 18, 2012


நனைந்த மரமும் நனையாத நானும் !

















உரையாட உறவிருந்தும்
தோணாத தனிமையில் தானாக
உலவ வந்தேன்
உயிரோடு தானிருந்தும்
உறவில்லா மரமொன்று
மழையீரம் உலர்த்தி நின்றது

மழையில் நனைந்த மங்கையிடம்தான்
பேச இயலாது ! மரத்திற்கென்ன
பேச ஆரம்பித்தேன்

ரசிப்பது பகல் மழையா ? இரவு மழையா ?
பகல் மழையில் பரவசமாய்
நனையும் மழலைகளையும்
இரவுமழை குளிரில் நடுங்கும்
கூடில்லா காகங்களையும்

மழை நின்றும் தூறலை நீட்டிப்பதேன்?
கலவி முடிந்தும்  நீங்கள் கட்டியணைத்து உறங்குவதேன்?

பூவேன் மேல்நோக்கி ? பழமேன் கீழ்நோக்கி ?
அதுவா ! ஐன்ஸ்டீன் ஈர்ப்பு விசை
கண்டறிய வினையூக்கி

மலர்களேன் மங்கைக்கு மட்டும்?
மடையா ! பூவை பாவைக்களித்தால்
மணக்கும் மலரும் ! மணக்க மங்கையும்
உனக்கு மட்டும்

புகையொன்று பிடித்திடவா?
வேண்டாம் ! உன்னுடன் உடன்கட்டை...விருப்பமில்லை

கயிறு கட்டி தொங்கினால் வலித்திடுமோ ?
இரு கயிறு - மழலை ஊஞ்சலாட்டம் - சுகம்
ஒரு கயிறு - உயிர் ஊசலாட்டம் -வலி

நீண்ட நீரம் கேட்டுவிட்டேன்..நீ போய் தூங்கென்றேன்
ஏன் ?
உறங்காமல் வாடிய பூக்களின் முகங்கண்டு
முத்தமிட வாராது காலையில் கருவண்டு

இதமான தென்றல்
சிறுதளித்து விட்டு
இரு நொடியிலேயே
உறங்கிப் போனது

அடுத்ததாரென சுற்றிப் பார்க்கையில்
மேகத்தினூடே ஓடி ஒளிந்தது
மின்னலொன்று.......


அன்புடன்,
ந வ செல்வேந்திரன்