Saturday, June 17, 2006

மாமியாரின் வார்த்தைகள் மருமகளுக்கு...!!

சென்று வா மகளே ! சென்று வா !!

பிரம்மா ஆணல்ல , பெண்ணென பூமிக்கு
புரியவைக்க நீயும் போய் வா !!

உன் குழந்தைக்கு நீ தாயாக
மீண்டும் உன் தாய்க்கு நீ குழந்தையாக...


சென்று வா மகளே ! சென்று வா !!


கட்டி உடைந்தாலே தாங்காதவர் மத்தியில்
கருவன்முறை தாங்கி வருகிறாயே உன் மத்தியில் !!

புளிப்புண்ணும் உன் முகங்கண்ட உறவின்
முகங்களை பூரிப்புண்ண ஆரம்பித்து விட்டதே !!!


சென்று வா மகளே ! சென்று வா !!

கணவன் எவனென காத்திருந்த காலமெல்லாம்
கண்சிமிட்டல் நேரமடி ...உன் உயிர்க்காய் நீ காத்திருப்பது !!

நங்கையாய் ஆடித்திரிந்த நீ
நத்தையாய் நடந்து கொள் !!

உளிதனை தாங்கினால்தான் சிலை பிறக்கும்
வலிதனை தாங்கினால்தான் சிசு பிறக்கும்


சென்று வா மகளே ! சென்று வா !!

அம்மா ! அம்மா !! என நீ அலறப்
போவதெல்லாம்... உன் பிள்ளை
அம்மா ! அம்மா ! என அழைக்க

நீ மகிழ்வதற்கே !!

உன் வீட்டில் பிறந்து நீ இங்கு
மகளாய் வளர்வதை போல்
உன் பிள்ளையும் வளரட்டும்...

நெற்றி முத்தமிட்டு !
சந்தனம் பூசிவிட்டு ! பேச இயலா பெருகிய
கண்ணீரை ஆனந்தமாய் துடைத்துவிட்டு
அனுப்புகிறேன் உன்னை !!

" வாழ்க வளமுடன்
வருக நிலவுடன் "

சென்று வா மகளே ! சென்று வா !!

-என் அண்ணியின் வளைகாப்பிற்காய் என் தாய் நினைத்ததை நான் எழுதியது...

இதில் ஒரு முக்கியமான பொருள் சிதையாமல் எழுதியிருக்கிறேன்...
கண்டுபிடித்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்

Saturday, June 03, 2006




கடலுக்கு சென்றால் இனியாவது
கால்களை நனையடி !!

கடலின் உவர்ப்பு கூடிக்கொண்டே
போகிறதாம் !!!!

வறண்டவை பார்த்து வற்றாத என் விழிகள் !!





"சோழ நாடு சோறுடைத்து" என்ற சொல்லுக்கும்
முப்போகம் விளைந்த நெல்லுக்கும்
சொந்தமான சோழப்பகுதிகளின் விகுதிகளே...
தஞ்சையாம் !

பச்சை வயலால் புகழுற்ற ஊரின்று
உச்சி வெயிலால் நிழலுற்று நிற்கிறதே !!

நீரில்லா ஆற்று மண்ணில்
நீந்தியவை தேடி அலையும்...
கொக்குகள் ஆயினவே ! மக்குகள் !!

புலி பசித்தாலும் புல்லுன்னா
காலம் போய்...
புல்லில்லா பசித்த ஆடுகள்
பூச்சிகள் உண்றனவே !!

ஆங்காங்கே கண்டழுதேன்
ஆண்மையில்லா பம்புசெட்டுகளை !!

தனக்காய் சண்டையிடும் அண்டையர்களை
கண்டகம் மகிழ்ந்த வரப்பின்று
வயலவாய் மாறியும் வருவோர்
யாருமில்லையே !!

நன்செய் உழுது வாழ்ந்தவெரெல்லம்
நஞ்சை உண்டு மாண்டனரே !!

வளங்கள் எல்லாம் வரலாறாய் ஆனதடி !
எதிர்காலம் என்ன பதில்கூறுமடி !!

விரைவில் விழிப்போமென உறங்குகின்றன !
விதைகளும்.....
உழைத்த சதைகளும் !!

Friday, June 02, 2006

நாருக்கும் உண்டிங்கே தனித்தன்மை !!

பூவோடு சேர்ந்து நாரும் மணக்கலாம் ! ஆனால்
பூவோடு சேர்ந்தாலும் நார் வாடுவதில்லை !!