Thursday, April 19, 2007

நீ வருவாய் என !




















தாய்வந்து தேட சிறுவயதில்
ஆடினாய் நீ கண்ணாமூச்சி
நீவந்து சேர ஏங்கியதால்
என்னுடல் இப்படியாச்சி

உடல்விட்டு உயிர்
போனால் பிணமடா
உனைவிட்டு உண்ணாமல்
அழுகிறேன் தினமடா

சொல்லிவிட்டா பிறந்தோமென
சொல்லாமல் போனாயடா
கொள்ளிவைத்து இறந்தேனென
இல்லாமல் போகுமாடா

நீ பிறந்தபின் கணவனுக்குதான்
கடைசி சாப்பாடு
நீ போனதினால் கணவனால்தான்
வாய்க்கரிசி ஏற்பாடோ

பெண்ணாய் நான் பிறந்ததினால்
இரண்டானது வீடெனக்கு
கண்ணா நீ தொலைந்ததனால்
இருண்டுபோனது வாழ்வெனக்கு

பாலூட்டிய மார்பிரண்டும் துடிக்குதடா
சிரிப்பூட்டிய உன்சிறுமுகமும் தெரியுதடா
தினம்தேடி என்னிதயம் வெடிக்குதடா
எந்நாடியும் துடிக்காமல் அடங்குதடா

உந்தன் 'காணவில்லை' சுவரொட்டியை
எந்தன் 'கண்ணீர் அஞ்சலி' சுவரொட்டி
மூடுமுன்னே ஓடோடி வந்துவிடு
மூடும்கண்களை மெதுவாய் திறந்துவிடு

அன்புடன்,
ந வ செல்வேந்திரன்