Wednesday, October 31, 2007

மழையினில் நனைகையில் !



குளித்துவந்த மனைவியை மீண்டும்
குளிக்க வைக்கும் கணவனாய்
காய்ந்திருந்த சட்டையை மீண்டும்
நனைத்தது மழை !

அவசரமாய் ஓடுகிறது மேகம்
தவறவிட்ட சில்லரைகளாய் மழைத்துளிகள்
சில்லரைகள் இல்லையென்றால் எல்லாம் கல்லறைதாம்
கல்லறை போகும்போது ஒற்றை சில்லரைதாம்

ஓசோன் ஓட்டையில் ஓலுகையில்
மனிதன்மேல் மனங்கசந்த மழை
சிறுகுழந்தை கைப்பட்டதும்
சிரித்து இறந்தது.

விழும் துளிகளை தட்டிதட்டி
நகைக்குது மழலை
வீழும் துளிகளை தட்டிதட்டி
பறக்குது பறவை
இரண்டும் மழைக்கின்முகம் காட்டுபவை.

அன்று நான் குளித்த அருவி
இன்று மழையில் தனியாய் குளிக்குமோ
இன்றைய என் மனித பிறவி
நாளைய மழையாய் மாறிப் பிறக்குமோ

மை தீர்ந்ததும்
கவிதையை முடித்தேன்
மழை தீர்ந்ததும்
கவிஞனைத் தொலைத்தேன் !

அன்புடன்

ந வ செல்வேந்திரன்.