Thursday, May 25, 2006

செல்லப் பெயர் !!

மல்லிகையை முல்லை என்றழைத்தேன் !!
சிரித்தார்கள் சிலபேர் !!

நான் என்ன உனை நிஜப்பெயர்
சொல்லியா அழைக்கிறேன் !!!

Thursday, May 18, 2006

நான், நிலவு , தனிமை



நினைவுகள் எனை வருடி உறங்காமற் செய்ய
மேகங்கள் நிலவை வருடி உறங்கச் சொல்ல !!


நம்மிடையே உறக்கம் தான் இல்லை
உரையாடல் இருக்கலாமே - நான் !

"கேள்விதனை மேலெறிந்து
பதில்தனை பிடித்துக் கொள்" - நிலா !!


நானும், நிலவும் ஆனோம்
தருமியும் ,சிவனுமாய்...

ஆண் வாழ்வு ஒள்வீச ஆதாரம் பெண்தானோ ?

என் வாழ்வு ஒளிவீச காரணமவன் ! கதிரவனவன் !!


வெண்ணிலவை ! பெண்ணிலவாய் ஒப்பிடுவதேன் ?

...
.....

பதிலளிக்க மறுத்துவிட்டு
மறைந்ததுவேன் முகிலுனுள்ளே !!

காரணம்தான் நானறிந்தேன் ! அதன்
காரணம்தான் நாணமென நானறிந்தேன் !!!


உடலிலா உரு கொண்டாய் ! கரு எதுவோ ?

முன்னதொரு பிறவியிலே
உன்னவளிடம் தோல்வியுற்று
உடலினை சுருட்டி உருண்டையானேன் !!


காதலியை பிரிந்து நானிருக்க
கதிரவனை பிரிந்து நீயிருக்க
காரணமாய்த்தான் தேய்கிறாயோ தினந்தோறும் ?

அடேய் ! மானிடா !!
உன் ஊடல் காமத்திற்கின்பமடா
என் தேய்தல் கிரகணத்திற்கின்பமடா !!


பால் நிலவே ? கடுகளவும் களங்கம் உனக்கேன் ?

பாதகா ! பருவென்றும் பாராமல்
"சிப்பிக்குள்ளேதானே முத்துக்கள்..
சிலையின் முகத்தில் எப்படி என்பாய் ??...உன்னவளிடம்

என்னவனிடம் எடுத்துரைத்து
உன்னுருவை கருவுருவாய் ஆக்கிடுவேன் !!

கோபம் வேண்டாம் வான்மகளே
உனை கான நாங்கள் வந்தோம்
நின் பாதம் பூவுலகில் படுவதெப்போ ?

காதலெனும் சொல் கவியிலும்,புவியிலும் இல்லாத பொது ....


தினம் இரவும் உறங்கமாட்டாயா ??

தினம் !
காதலியை காண்பதால் உறக்கமில்லை உனக்கு
காதலனை காணாததால் உறக்கமில்லை எனக்கு !!


போதுமடா ! பதில்கள்தான் தீர்ந்திடினும்
கேள்விகள்தான் தீராதோ ?

உன்னவளும்,என்னவனும்
நமை காதலர்களாய் காணுமுன்னே
கண்ணுறங்கு நன்மகனே !!


வெண்ணிலவை இமை மூடி மறைத்து
பெண்ணிலவை இதயத்தில் மூடி மறைத்து

இமைக்காமல் உறங்கினேன்
ஓர் இனிமை இரவில் ...

-- செல்வேந்திரன்.

Tuesday, May 16, 2006

ஆறு நோக்கி செல்லாதே ! தலைவா !!
ஆட்சிபீடம் நோக்கி செல் !!

உன்மேல் விழுந்த சேறுதனை
கழுவுவதல்ல உன் வேலை !!

உன் பணிக்காய் காத்திருக்கும்
மக்களின் கவலைதனை துடை !
அவர்தம் ஆனந்தக்கண்ணீர் செய்யும் அப்பணியை !!

உடல் தழும்பு ! உண்மை வீரனுக்கு
உன் உள்ளத்தழும்பு தமிழுலகின் விடியலுக்கு !!

களிம்பு மருந்து தேட வேண்டாம் ! உன்
காயம்தனை மக்கள்தம் களிப்பு
மருந்து ஆற்றட்டும் !!

பெருமூச்சு எதற்கு ??
உன் மூச்சே போதும் !! அவர்கள் மூர்ச்சையாவதர்க்கு !!

கால்கள் குத்திய கற்களெல்லாம் இனி
உன் கால்தூசிதனை கூட குத்தாது !!

சொன்னதை செய்வான் வாரிசென
அய்யாவின்,அண்ணாவின் ஆத்மாக்கள்
உளம் மகிழட்டும் ! அதைப்போல்
இவ்வூர் மகிழட்டும் !!

கதிரவனின் உதயத்துடிப்பும் !
கலைஞரின் இதயத்துடிப்பும் !!
நீடிக்கும் இவ்வுலகில் !!

-- செல்வேந்திரன்


கலைஞரின் வெற்றி கவிதை:

ஆறு நோக்கிச் செல்கின்றேன்
அவர்கள் வாரி இறைத்த
சேறு கழுவிக் கொள்வதற்காக!

களிம்பு மருந்து தேடுகின்றேன்
தழும்பு தோன்றிடும் நெஞ்சக்
காயத்தில் தடவுதற்காக!

மூச்சை இழுத்துப் பெருமூச்சாக
விடுகின்றேன்; அவர்தம் ஆபாசப்
பேச்சை என் சுவாசம்,
அடித்துப் போவதற்காக!

வெற்றி என்பதைத் தேடிக் கொடுத்து
துரோகத்தின்
நெற்றிப் பொட்டில் அறைந்திட்ட
உடன்பிறப்பு நீ இருக்கும்போது;

உடல் பொருள் ஆவி அனைத்தையும்
உலகில் ஓர் துரும்பென மதித்து

கடல் போல் நம் அணியைப் பெருக்கிட
கழகம் வளர்த்திட

கண்ணியர் அண்ணாவின் வழி நடத்திட
கட்டுப்பாடெனும் அய்யாவின் மொழி போற்றிட-
காத்திருப்போம்; தமிழகத்தைப்
பூத்திருக்கும் மலர்ச் சோலையாக்குதற்கே!

-மு.க.

Thursday, May 04, 2006

" இன்றைய மழை நீர்
நாளைய உயிர் நீர்"

வாசகத்தை வாசித்தேன் !
தார்ச்சாலையை நனைத்த
தண்ணீர் லாரியில் ....