Saturday, June 03, 2006

வறண்டவை பார்த்து வற்றாத என் விழிகள் !!





"சோழ நாடு சோறுடைத்து" என்ற சொல்லுக்கும்
முப்போகம் விளைந்த நெல்லுக்கும்
சொந்தமான சோழப்பகுதிகளின் விகுதிகளே...
தஞ்சையாம் !

பச்சை வயலால் புகழுற்ற ஊரின்று
உச்சி வெயிலால் நிழலுற்று நிற்கிறதே !!

நீரில்லா ஆற்று மண்ணில்
நீந்தியவை தேடி அலையும்...
கொக்குகள் ஆயினவே ! மக்குகள் !!

புலி பசித்தாலும் புல்லுன்னா
காலம் போய்...
புல்லில்லா பசித்த ஆடுகள்
பூச்சிகள் உண்றனவே !!

ஆங்காங்கே கண்டழுதேன்
ஆண்மையில்லா பம்புசெட்டுகளை !!

தனக்காய் சண்டையிடும் அண்டையர்களை
கண்டகம் மகிழ்ந்த வரப்பின்று
வயலவாய் மாறியும் வருவோர்
யாருமில்லையே !!

நன்செய் உழுது வாழ்ந்தவெரெல்லம்
நஞ்சை உண்டு மாண்டனரே !!

வளங்கள் எல்லாம் வரலாறாய் ஆனதடி !
எதிர்காலம் என்ன பதில்கூறுமடி !!

விரைவில் விழிப்போமென உறங்குகின்றன !
விதைகளும்.....
உழைத்த சதைகளும் !!

1 comment:

KC! said...

"Unranave"-nra word kidayadhe..tamizh-la "undanave"-nra word dhane iruku? Good kavidhai apart from spelling mistakes