Wednesday, July 30, 2008
தாய் கண்ணீர் !
கருவாய் நீ உருவாகியதை
கணவனிடம்கண்ணால் கூறும்பொழுது வரும் ஆனந்த நீர்
அடிக்கடி தடவிப் பார்த்து எப்படி தவிக்கிறாய்
என்றபொழுது குவளையாக வரும் கவலை நீர்
புரண்டு படுத்தால் புண்படுமென
ஒரே நிலையில் படுப்பதால் வரும் பாச நீர்
எட்டி உதைக்கும் பொழுது உன் கால்
வலிக்குமென உருகும் நொடியில் அது உன்னத நீர்
பத்து மாதம் பையிலிருந்த நீ
பக்கத்தில் படுத்தவுடன் வந்த பொன்நீர்
உன்னலழுகையின் காரணமறிந்து ஊட்டுவாள் தாய்ப்பால்
அழுகை சத்தம் அனைத்தும் சத்தமாய் மாறும்பொழுது அது அன்பு நீர்
பள்ளிப்பாடம் செய்யாமல்
தடியடி வாங்குவாய் தந்தையிடம்
அறிஞர்கள் கூட ஆடி போவார்கள்
அடிபடாமல் அழமுடியமா என உன்தாய் பார்த்து
நீ பரிட்சைக்கு படிக்கும்பொழுது அவள் படிப்பாள் உன்னை
உறக்கம் உன் கண்ணை வருடும் நேரம் உனெதிர்காலம் நினைத்து ஊமைக்கண்ணீர் வடிப்பாள் உன் அன்னை
கல்லூரி காதலில் கவலையுடன் தாடி வளர்ப்பாய்
காரணம் கேட்ட கணவனிடம் மூடி மறைத்து
பின் தலையனை மூடி மறைத்து முகம் நனைப்பாள்
வேலை கிடைக்காத விரக்தியால் நொடிந்து போவாய்
நொடி நொடியே நினைத்து கண்ணீர்
படிகமாகும் அவள் கன்னம்
மனைவியின் பேச்சுக்கு மறுமொழி பேசமாட்டாய்
சிறுவயதில் நீ எப்பொழுது பேசுவாய் என்ற ஏக்கம்
மீண்டும் வருவதால் வரும் அமைதிக் கண்ணீர்
முதியோர் இல்லம் சேர்ந்த பின்
முடிவிலா கண்ணீர் விடுவாள்
தன்னிலை நினைத்துதான் இந்த தாய்நீர்
எனநினைப்பார் அருகிலிருந்த அகதியாகப்பட்டவர்கள்
உன் பின்னிலை நினைத்துதான் அந்த அழுகை
என்றவுண்மை அவள் மனம் மட்டுமே அறியும்
மரணப் படுக்கையிலும் மன்றாடுவாள் இறைவனிடம்
என் மகன் நலம் காப்பாயென
காலன் கடத்திச் சென்ற உந்தாயை நினைத்து
கடவுள் கூட கண்ணீர் வடிப்பான்
தாயின் பெருமையை உணர்ந்துவிடு
கவிதையின் தலைப்பை துடைத்துவிடு
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Very Nice Selva...
No words to price!
Post a Comment