Thursday, July 17, 2008

மரணம் நல்லது !



[the above photo is taken from google]

பூ மரித்தால்தான் காயும்,கனியும்
கனி மரித்தால்தான் விதையும், விருட்சமும்

குளிர் காற்றுடன் மேகம் விபத்தாகாமல் போனால்
ரத்தத்துளிகள் ஏதிங்கே பூமிக்கு

மண்புழு தூண்டில் தூக்கில் தொங்கியதால்தான்
இன்று வலைவீசி வாழும் வரை வந்திருக்கிறோம்

அலைகளின் மூச்சு அடங்காமல் போனால்
கரைகள் ஏது ! கால் நனைபெப்படி !!

சூளையில் செங்கல் தீக்கிரையாகாமல் போனால்
சூரிய வெப்பம் தாங்கும் கட்டிடங்கள் இங்கேது

தாவி வந்த தண்ணீர் துளிகள் தற்கொலைக்கு தயங்கினால்
கண்ணுக்கினிய அருவிகள் எங்கே

சிலநொடி வாழ்வதால்தான் வானவில்லுக்கு
தினம் சுற்றும் சூரியனை விட விசிறிகள் அதிகம்

பூகம்பம் பூமித்தாயின் கருவிற் கலைந்தால்தான்
கலங்காமல் கண்ணுறங்கும் கண்ணீர் விழிகள்

மழைத்துளி மண்ணில் புதைந்தால்தான்
நிலத்தடி நீர் நீடுடி வாழும்

ஆங்காங்கே செல்கள் மரித்தால் தான்
அழகான மச்சங்கள் அங்கத்திலே

மரணம் மட்டும் இல்லையெனில் இருக்குமா
குழந்தையின் பிறப்பு இனிமையாக

வேண்டும் ! நமக்கு இயற்கை மரணம்
வேண்டாம் !! நம்மால் இயற்கைக்கு மரணம்

இயற்கையாய் நிகழும் மரணம் எதுவும் தவறில்லை
நீ தவறினாலும் இயற்கைக்கு என்றும் மரணமில்லை

மரணம் நல்லது ! இயற்கை மரணம் நல்லது !!

3 Comments:

Anonymous Anonymous said...

Hi selva,

nice to c ur poem after long time :)
take care
Convey my wishes to Sanjay

Saturday, July 26, 2008 2:59:00 AM EDT  
Blogger செல்வேந்திரன் said...

Thanks :) and why u let me to guess you ?

Monday, July 28, 2008 6:39:00 PM EDT  
Anonymous Anonymous said...

enna selva ennai theriyalaiyaa?
very bad :(
CV vitu ponathum maranthuteengala??

take care & convey my regards to Sanjay :)

(Hope atleast now,u guessed me correctly)

Tuesday, August 5, 2008 7:56:00 AM EDT  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home