Sunday, July 23, 2006

விதவை !

வெள்ளைக் காகிதத்தில் ஒற்றையாய்
ஓர் கவிதை ! வாசகன் இல்லாமல்.

வீட்டிலுள்ள தலைவன் புகைப்படம் கூட
அவன் நினைவினை அதிகமாய் தீண்டியதில்லை..

சாலையோர பூக்கடையும்,
சேலையோர சிறுமுடிச்சும்,
காலை நேர கடுங்குளிரும்,
மாலை நேர காத்திருப்பும்

கண்டு கொல்லும், கண்டு கொள்ளா(த)
முடிச்சவிழ்ந்த மொட்டை

அடுத்த மாத மண அழைப்பிதழ்கள்
அடுக்களையில் அழ வைக்கும்..

ஆடி மாதம் ஆண்டுகளாய் ஆகி
படுக்கையிலே முகம் நனைக்கும்

நெறி தவறா நடந்தாலும்
நெடியுடைய ஊர் பேச்சை
தாரை மிதித்து நடந்திடுவாள்
ஊரை சகித்து தலை நிமிர்வாள்

கை முளைத்து, கால் முளைத்து
கடைக்கு செல்ல தந்தைக்காய்
காத்திருக்கும் குழந்தை உள்ளம்
தாயிடமே கேட்டிடுமே ! செத்திடுவாள் சில நிமிடம்...



பிள்ளையினை வழியனுப்பி
தொல்லைகளை தனுள் அமிக்கி
நேரம் வரக் காத்திருந்து
பிள்ளைக்கு மணம் முடிப்பாள்

குழந்தைகள் காதல் செய்யும் முதலிரவில்
மனமும், உடலும் ஒன்றாய்
கட்டிலில் உறங்கும்
அவளுக்கும் அது மீண்டதோ(மோ)ர் முதலிரவு !!


அன்புடன்,
செல்வேந்திரன்.

5 comments:

சிவகுமார் சுப்புராமன் said...

மிக அழகான மற்றும் ஆழமான கவிதை.

செல்வேந்திரன் said...

மிக்க நன்றி சிவக்குமார் !

Kirubakar said...

" aalam.. 1000 adi aalam..
neelam.. oru latcha oli varuda neelam.."

செல்வேந்திரன் said...

thanks a ton for your comments :)

Anonymous said...

[url=http://sexrolikov.net.ua/tags/%F1%EC%EE%F2%F0%E5%F2%FC/]смотреть[/url] Смотри и дрочи : [url=http://sexrolikov.net.ua/tags/%CF%E5%F2%E5%E9/]Петей[/url] , это все смотри