சென்று வா மகளே ! சென்று வா !!
பிரம்மா ஆணல்ல , பெண்ணென பூமிக்கு
புரியவைக்க நீயும் போய் வா !!
உன் குழந்தைக்கு நீ தாயாக
மீண்டும் உன் தாய்க்கு நீ குழந்தையாக...
சென்று வா மகளே ! சென்று வா !!
கட்டி உடைந்தாலே தாங்காதவர் மத்தியில்
கருவன்முறை தாங்கி வருகிறாயே உன் மத்தியில் !!
புளிப்புண்ணும் உன் முகங்கண்ட உறவின்
முகங்களை பூரிப்புண்ண ஆரம்பித்து விட்டதே !!!
சென்று வா மகளே ! சென்று வா !!
கணவன் எவனென காத்திருந்த காலமெல்லாம்
கண்சிமிட்டல் நேரமடி ...உன் உயிர்க்காய் நீ காத்திருப்பது !!
நங்கையாய் ஆடித்திரிந்த நீ
நத்தையாய் நடந்து கொள் !!
உளிதனை தாங்கினால்தான் சிலை பிறக்கும்
வலிதனை தாங்கினால்தான் சிசு பிறக்கும்
சென்று வா மகளே ! சென்று வா !!
அம்மா ! அம்மா !! என நீ அலறப்
போவதெல்லாம்... உன் பிள்ளை
அம்மா ! அம்மா ! என அழைக்க
நீ மகிழ்வதற்கே !!
உன் வீட்டில் பிறந்து நீ இங்கு
மகளாய் வளர்வதை போல்
உன் பிள்ளையும் வளரட்டும்...
நெற்றி முத்தமிட்டு !
சந்தனம் பூசிவிட்டு ! பேச இயலா பெருகிய
கண்ணீரை ஆனந்தமாய் துடைத்துவிட்டு
அனுப்புகிறேன் உன்னை !!
" வாழ்க வளமுடன்
வருக நிலவுடன் "
சென்று வா மகளே ! சென்று வா !!
-என் அண்ணியின் வளைகாப்பிற்காய் என் தாய் நினைத்ததை நான் எழுதியது...
இதில் ஒரு முக்கியமான பொருள் சிதையாமல் எழுதியிருக்கிறேன்...
கண்டுபிடித்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்
4 comments:
Suriyaa....Manamarntha paaraattukalaukku Manamarntha Nanrigal !!
hi sellu...nalla irukku da...oru mamiyear than marumakalai aval amma vettuku kulanthai petrukkulla anupi vaipathu poola ezhuthi irukka...ethuthana nee kandu pidikka sonna porul?...
maamiyaar marumagalukku solramdhiriyaana ungal karpanaikku hats off....unga padaipugal ellam kalakkala erukku
arpudhamaana varigal..
~kiruba..
Post a Comment