முகம் நிமிரும் நொடி...

இத்தனை தூரம் உருண்ட போதிலும்
இருமலைகள் கடந்த போதிலும்
பிரிவுபயம் காரணமாய் பெருமூச்சாய்
போகாமல் மௌனமான சக்கரக்காற்று...
இருகைகளும் அவளிடுப்பை சுற்றும்
தவம் பலித்த மகிழ்ச்சியில்
ஒற்றை காலை தரை பதித்து
ஒரு பக்கமாய் சரிந்தது அவ்வண்டி
அவள் கைப்பட்ட வாக்கியம் ஒன்று
கம்பிவழி மின்சாரமாய் காதடைந்து
கவியும் இசையும் கலந்த
பாடலாய் அவளிதயத்தில் இறங்கியது
மேற்புறமாய் முகம் தூக்கும்போது
வலப்புறமாய் தன்முகம் திருப்ப
தயாராய் இருந்த கணத்திலெடுத்த
புகைப்படம்தான் நீங்கள் மேலே பார்த்தது.....


3 Comments:
நல்லாயிருக்குங்க.
நன்றி அகநாழிகை !!!
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home