Saturday, October 14, 2006

புறப்படுடி என் பொண்டாட்டியே !

பதினாலு வருசத்துக்கே
புராணம்தான் பொங்குதடி
பரம்பரையா வாழுறோமே
பிராணனைதான் போகுதடி

சிங்கம் புலி கரடி கூட‌
பட்டணம்தான் போகுதடி
வேடிக்கை காட்டிவிட்டு
கூண்டுக்குள்ளே தூங்குதடி

புளிமூட்டை கணக்கா நாம
பூச்சிக‌டியில் வாழுறோம்டி
எலிவேட்டை இனிபோதும்
எந்திரிச்சி கூட‌ வாடி

ச‌லுகையெல்லாம் அர‌சாங்க‌ம்
கொடுத்துத்தான் பார்குதடி
மூக்கொலுகும் புள்ளைய‌த்தான்
முன்னேத்த‌ கூட‌வாடி

காடு,மலை அருவியெல்லாம்
பத்திரமா இருக்குமடி
கால்வலிக்க நடந்து போயி
காலைக்குள்ள சேர்வோமடி

ந‌க‌ர்ந்தாதான் ந‌க‌ர‌ம்
இப்ப‌ வ‌ரும்
ந‌க‌ர‌ல‌னா நாக‌ரீக‌ம்
எப்ப‌ வ‌ரும்

எப்பாடு ப‌ட்டாவது
எழுந்துரிச்சி நிப்போம‌டி
இழிசாதிக்கு பொற‌ந்த‌ ப‌யலை
இனிசாதிக்க‌ வைப்போம‌டி

4 comments:

சீனு said...

wow...nalla varikal....gr8 poem....superb selva...keep it up..

செல்வேந்திரன் said...

sarida seenu..sure will keep it up ..

Mugilan said...

Selva...this one en mandai-ku innum sariya puriyala! You got to explain me offline :)

Kirubakar said...

nice varigal..