Thursday, May 18, 2006

நான், நிலவு , தனிமை



நினைவுகள் எனை வருடி உறங்காமற் செய்ய
மேகங்கள் நிலவை வருடி உறங்கச் சொல்ல !!


நம்மிடையே உறக்கம் தான் இல்லை
உரையாடல் இருக்கலாமே - நான் !

"கேள்விதனை மேலெறிந்து
பதில்தனை பிடித்துக் கொள்" - நிலா !!


நானும், நிலவும் ஆனோம்
தருமியும் ,சிவனுமாய்...

ஆண் வாழ்வு ஒள்வீச ஆதாரம் பெண்தானோ ?

என் வாழ்வு ஒளிவீச காரணமவன் ! கதிரவனவன் !!


வெண்ணிலவை ! பெண்ணிலவாய் ஒப்பிடுவதேன் ?

...
.....

பதிலளிக்க மறுத்துவிட்டு
மறைந்ததுவேன் முகிலுனுள்ளே !!

காரணம்தான் நானறிந்தேன் ! அதன்
காரணம்தான் நாணமென நானறிந்தேன் !!!


உடலிலா உரு கொண்டாய் ! கரு எதுவோ ?

முன்னதொரு பிறவியிலே
உன்னவளிடம் தோல்வியுற்று
உடலினை சுருட்டி உருண்டையானேன் !!


காதலியை பிரிந்து நானிருக்க
கதிரவனை பிரிந்து நீயிருக்க
காரணமாய்த்தான் தேய்கிறாயோ தினந்தோறும் ?

அடேய் ! மானிடா !!
உன் ஊடல் காமத்திற்கின்பமடா
என் தேய்தல் கிரகணத்திற்கின்பமடா !!


பால் நிலவே ? கடுகளவும் களங்கம் உனக்கேன் ?

பாதகா ! பருவென்றும் பாராமல்
"சிப்பிக்குள்ளேதானே முத்துக்கள்..
சிலையின் முகத்தில் எப்படி என்பாய் ??...உன்னவளிடம்

என்னவனிடம் எடுத்துரைத்து
உன்னுருவை கருவுருவாய் ஆக்கிடுவேன் !!

கோபம் வேண்டாம் வான்மகளே
உனை கான நாங்கள் வந்தோம்
நின் பாதம் பூவுலகில் படுவதெப்போ ?

காதலெனும் சொல் கவியிலும்,புவியிலும் இல்லாத பொது ....


தினம் இரவும் உறங்கமாட்டாயா ??

தினம் !
காதலியை காண்பதால் உறக்கமில்லை உனக்கு
காதலனை காணாததால் உறக்கமில்லை எனக்கு !!


போதுமடா ! பதில்கள்தான் தீர்ந்திடினும்
கேள்விகள்தான் தீராதோ ?

உன்னவளும்,என்னவனும்
நமை காதலர்களாய் காணுமுன்னே
கண்ணுறங்கு நன்மகனே !!


வெண்ணிலவை இமை மூடி மறைத்து
பெண்ணிலவை இதயத்தில் மூடி மறைத்து

இமைக்காமல் உறங்கினேன்
ஓர் இனிமை இரவில் ...

-- செல்வேந்திரன்.

6 comments:

Dharma said...

wonderful imagination & choice of words... very nice...

Harish said...

nee sari illa pa
ennamo aaiduchchu unakku...yaaru idukku kaaranam??

ruby said...

nice post selva...

I think, you have a good recollection of many poetical tamil words...

செல்வேந்திரன் said...

Thanks Dharma for your words ;-)


apidi ellam onnum illa harish !!

காதலித்து பின் கவிதை
எழுதுபவன் காதலன் !!

கவிதையை காதலித்து பின்
எழுதுபவனே கவிஞன் !!

நான் கவிஞனா ?? காதலனா ??

Nanri nanbarea !!
ennamo solreenga ...puriyala..but okie etho thonunatha ezhuthurean ;-)!!

சீனு said...

sellu kelappuraa poo....kavinganaa??? kadhalana???? - vum kelapputhu pooo

செல்வேந்திரன் said...

summa da seenu ..ithelaam kandukaathaa ;-))