Tuesday, May 16, 2006

ஆறு நோக்கி செல்லாதே ! தலைவா !!
ஆட்சிபீடம் நோக்கி செல் !!

உன்மேல் விழுந்த சேறுதனை
கழுவுவதல்ல உன் வேலை !!

உன் பணிக்காய் காத்திருக்கும்
மக்களின் கவலைதனை துடை !
அவர்தம் ஆனந்தக்கண்ணீர் செய்யும் அப்பணியை !!

உடல் தழும்பு ! உண்மை வீரனுக்கு
உன் உள்ளத்தழும்பு தமிழுலகின் விடியலுக்கு !!

களிம்பு மருந்து தேட வேண்டாம் ! உன்
காயம்தனை மக்கள்தம் களிப்பு
மருந்து ஆற்றட்டும் !!

பெருமூச்சு எதற்கு ??
உன் மூச்சே போதும் !! அவர்கள் மூர்ச்சையாவதர்க்கு !!

கால்கள் குத்திய கற்களெல்லாம் இனி
உன் கால்தூசிதனை கூட குத்தாது !!

சொன்னதை செய்வான் வாரிசென
அய்யாவின்,அண்ணாவின் ஆத்மாக்கள்
உளம் மகிழட்டும் ! அதைப்போல்
இவ்வூர் மகிழட்டும் !!

கதிரவனின் உதயத்துடிப்பும் !
கலைஞரின் இதயத்துடிப்பும் !!
நீடிக்கும் இவ்வுலகில் !!

-- செல்வேந்திரன்


கலைஞரின் வெற்றி கவிதை:

ஆறு நோக்கிச் செல்கின்றேன்
அவர்கள் வாரி இறைத்த
சேறு கழுவிக் கொள்வதற்காக!

களிம்பு மருந்து தேடுகின்றேன்
தழும்பு தோன்றிடும் நெஞ்சக்
காயத்தில் தடவுதற்காக!

மூச்சை இழுத்துப் பெருமூச்சாக
விடுகின்றேன்; அவர்தம் ஆபாசப்
பேச்சை என் சுவாசம்,
அடித்துப் போவதற்காக!

வெற்றி என்பதைத் தேடிக் கொடுத்து
துரோகத்தின்
நெற்றிப் பொட்டில் அறைந்திட்ட
உடன்பிறப்பு நீ இருக்கும்போது;

உடல் பொருள் ஆவி அனைத்தையும்
உலகில் ஓர் துரும்பென மதித்து

கடல் போல் நம் அணியைப் பெருக்கிட
கழகம் வளர்த்திட

கண்ணியர் அண்ணாவின் வழி நடத்திட
கட்டுப்பாடெனும் அய்யாவின் மொழி போற்றிட-
காத்திருப்போம்; தமிழகத்தைப்
பூத்திருக்கும் மலர்ச் சோலையாக்குதற்கே!

-மு.க.

7 comments:

Anonymous said...

/களிம்பு மருந்து தேட வேண்டாம் !
உன் காயம்தனை மக்கள்தம் களிப்பு மருந்து ஆற்றட்டும் !!//

நல்ல கருத்து..
வாழ்த்துக்கள்!!

செல்வேந்திரன் said...

உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி !!
உங்கள் முகவரி ???

செல்வேந்திரன் said...

Dear ,check your gmail id pjtlakshmi@gmail.com
..How are you ? howz life going ??

ruby said...

MMmm samuga paarvai ulla, arasiyal sarntha, Kalaigarukku, oru kalaigan ehuthum madal...nalla irukku...

Though, My views on politicians are totally differnt...but this is paratavendiya nalla muyarchiii

keep going...

செல்வேந்திரன் said...

Thanks KRK for your words...

As I am also not much interested in politics...

I have respect on him for his interests in tamil,poems..etc...

Oru thalaivanukku ulla thakuthi avarukku irukuratha naan feel pannean !!

செல்வேந்திரன் said...

Ya I like him.

Oru thalaivanratha vida oru thani manithaanaa enakku pidikum...

like his interests on people,poem,tamil,etc,paguththarivu,etc.....

It seems that u dont like him ??

ruby said...

Selva
I like him and respect him {adore him }as a tamil writer but other than that as an individual ...Nope