Sunday, February 19, 2006

போண்டா

மனிதர் சிலர் இறந்த பின் தான் எண்ணைச்சட்டி !
மனிதர் உண்ணும் உன் பிறப்பிடமே எண்ணைச்சட்டி !!

கொதித்த நல்லெண்ணையால் உன்னுடலில் பெருங்காயம் !
சகித்த உன் நல்லெண்ணத்தால் உயிர் பிழைத்தது வெங்காயம் !!

பாட்டியால் புகழுற்று புத்தகத்தில் இடம்பிடித்தது வடை !
போட்டியாய் உனை போற்றி அதற்கு தருகிறேன் விடை !!

தனியாய் என்றும் வாணலியில் பிறந்ததில்லை !
ஒன்றாய் என்றும் மனிதவாயில் இறந்ததில்லை !!

ஒட்டிய தண்ணீரை ஒதுக்கிவிட்டு எண்ணையை சுமந்தீர்கள் !
பின் எண்ணையை ஒழுகவிட்டு ஆசையை துறந்தீர்கள் !!

சிலருக்கு ! மாலையில் நீதான் சிற்றுண்டி !
அரிதாய் காசு கிடைத்த சிறுவனுக்கு நீயே பேருண்டி !!

இன்று !
உருண்டையாய் உள்ள உன்னை நான் உண்கிறேன் ...

நாளை !
உருண்டையாய் உள்ள உலகம் எனை உண்ணும்......

1 comment:

Anonymous said...

Ponda pual petradhu aiya...

~kiruba..