Thursday, February 16, 2006

அம்மா

காலத்தை வெறுக்கிறேன் !
நான் பிறந்தவுடன் நில்லாமல் போனதற்காக...ஏனெனில்
உன் மடியில் மழலையாகவே வாழ்ந்திருப்பேன்...

கண்ணாடியை வெறுக்கிறேன் !
உன்னால் கிடைத்த சிகையலங்காரம் சிதைந்ததற்காக...

நட்பினை வெறுக்கிறேன் !
உன்னுடன் பழகும் காலம் குறைந்தமைக்காக...

காதலியை வெறுக்கிறேன் !
கனவில் கூட உனை நினைக்க விடாமற் செய்தமைக்காக...

கடைசியில் அம்மா ! உன்னையே வெறுக்கிறேன் !!
என்னை அம்மா ஆகவிடாமல் ஆணாக படைத்ததற்காக...

2 comments:

neighbour said...

machan...

kalikeeta da...

This is babu - CSE - 2003.. nyabhagam irukaaa...

செல்வேந்திரன் said...

Thanx Ammu !!
Ur writings are good

keep on writing & Reading ;-)!!