Wednesday, February 03, 2010

சிறு ஒளி ! பெரு மகிழ்ச்சி !!



கடல்தாயின் கருவில் உதித்து
அலைமடியில் மெதுவாய் தவழ்ந்து
மணலேறி மரமேறி உச்சிவந்த
கானல்நீர் வெளிச்சம்

வானத் திரை தினம்விலக்கி
அங்குமிங்கும் ஆடும் குழந்தைக்கு
உண்ணுஞ் சோறின் நிறங்காட்டும்
கண்குளிரும் வெளிச்சம்

காற்று வந்து கலைத்திடுமென
அவசரத்தில் மேல்நோக்கி பெய்த
மேக மழை துளிகளின்
கண்ணுறுத்தா வெளிச்சம்

உலகம் போற்றும் இவ்வெளிச்சங்கள்
ஒன்றுமில்லை ! பிறந்த நாளில்
காதலியின் மகிழ்முகம் காட்டி
மரித்துவிட்ட மெழுகுவர்த்தியின் முன்பு....

No comments: