Saturday, January 21, 2006

நம் வாழ்க்கை

அலுவலகத்திலிருந்து ஆரறை மணிக்கே கிளம்பினேன்
இருந்தும் ஆச்சர்யமில்லை ..ஆம் அது அதிகாலை ஆரறை..

Bus stand வந்தவுடனே Bus வந்தது
எனக்கல்ல எதிர்சாலையில்...
இக்கரைக்கு அக்கரை பச்சை மட்டுமல்ல..Bus ம்தான்

காலைக்கடன் நல்லது என்பதை தவறாய்
புரிந்த ஒருவன் கையை நீட்டினான்...

"சில்லரை இல்லை சென்றுவிடு" என்றேன்
"conductor இடம் இதையே சொல்லு கலாய்ப்பான்" கூறிவிட்டு சென்றான்
மனதுக்குள் சிரித்தும்,சிந்தித்தும் நின்றேன்..

கைகளை நீட்டினேன் பேருந்தை நிறுத்த
Traffic Police ஐ கண்ட Two-wheeler போல் நிற்காமல் சென்றது
கல்லூரி வரை கற்றதாயிற்றே...எப்படியோ ஏறிவிட்டேன்..

பூசாரிக்கும், நடத்துனர்க்கும் ஒரு ஒற்றுமை உண்டு
பூசாரி நமக்காக அர்ச்சனை செய்வார் !
நடத்துனர் நம்மை அர்ச்சனை செய்வார் !!
அர்ச்சனை முடித்ததால் அவருக்கு காசை கொடுத்துவிட்டு
தட்சனையாய் பயணசீட்டை பெற்றேன்..

உள்ளிருந்த எனக்கு "புகை பிடித்தல்" கெட்டது என்றும்
பின்னால் வந்தவனுக்கு "புகை குளியல்" நல்லது என்றும்
புகை விட்டபடியே சென்றது பேருந்து...

இரவு உறக்கம் இல்லாததால் இருக்கையிலேயே
உறங்க ஆரம்பித்தேன்...

"தம்பி எழுந்திரிப்பா" ...

"இன்னும் கொஞ்ச நேரம் Mummy"..... Please.

"தம்பி எழுந்திரிப்பா ...இது Ladies seat" ..

கண் விழித்து பார்த்தேன் நின்றது
கருணை அதிகமாயும்,உருவம் சின்னதாயும் உள்ள ஒரு பெண்...

எழுந்து நின்று அரைமணி தான் இருக்கும்
அதற்க்குள் இறங்கும் இடம் வந்து விட்டது ;-)

எதிரே வந்த பெண் என்னையே பார்த்து சென்றாள்..
சின்னதாய் வந்த சந்தோசம் சில நொடிதான் நீடித்தது..
அவள் பார்த்தது என்னையல்ல ..என் ID-Card ஐ...

வீதியில் நடந்து வந்தேன்...

School van க்காக காத்திருக்கும் குழந்தைகளுக்கும்,
Office Bus க்காக காத்திருக்கும் என்னை போன்ற நண்பர்களுக்கும்
அவர்கள் செல்ல போகும் இடம் சந்தோசமாய் இருப்பதில்லை..

கடல் நீரை குடி நீராய் மாற்ற முடியுமா ?
என ஆலோசிக்கும் அறிஞர்கள் மத்தியில்..
அன்றைய உணவை குப்பை தொட்டியிலிருந்து
எடுத்துசென்றான் ஒரு தூய்மையில்லா தூய்மை விரும்பி !!!

சோர்வாய் வீட்டை அடைந்தேன்.
நண்பர்கள் வீட்டில் Night Shift முடித்துவிட்டு
அவரவர் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொன்டிருந்தார்கள்..

என்ன சாப்பாடு என்றேன் ?
சப்பாத்தி என்றான் என் நண்பன்..
"அது நேத்து Night குதானடா.."
"Night வரமாட்டேன் சொன்னியா ? காலைலயும் உனக்கு அதான்டா"...என்றான்.

முழுதாய் மூன்று மணி நேரம் கூட இருக்காது என்னுறக்கம்
Complete ஆகாத code என்னை அதற்குள் எழுப்பிவிட்டது

எழுந்து கிளம்பினேன்...
"இன்றாவது சீக்கிரம் வரணும்"....என்றபடியே !!!!