
சிறந்தது எதுவெனவறிய
திறந்தது மனது...
பரந்து விரிந்த வானம் பார்த்தேன்
பரவசமடைந்ததுதான் சிறந்தது என்றிருக்கையில்
எண்ணிலா கைகளால் என்னை தொட்டான் பகலவன்
ஆகா ...இவனல்லவோ இயற்கையின் இருமாப்பு
பட்டம் பகலவனுக்கே ...பார்த்தேன் மேலே ...
என்னை மறந்து விட்டாயே என்றது ஏக்கமாய்
அடடா...உன்னையா மறந்தேன்..
உன்னாலல்லவா ..
விவசாய பயிர்களும்
விவசாயி உயிர்களும் வாழுகின்றன..
மன்னிப்பாய் மேகமே என்று மன்றாடிய பொழுது...
சற்றே குளிர்ந்து பூமி..குனிந்தவன் நிமிர்ந்தேன்..
குறுநகை புரிந்தது நிலா ...புன்னகையிற் சிறந்ததேது....
கலகல சிரிப்பொலியில் கவனம் சிதறினேன் ..
ஒரு நகைக்கே உருகி விட்டாயே ..
இப்பொழுதென்ன சொல்கிறாய் ?
எகத்தாளம் செய்தனர் நட்சத்திர நண்பர்கள் ...
தவறான ஆராய்ச்சியில் ஈடுபட்டோமோ
தனியாக வருந்துகையில் .....
உயிரிருக்க புலன்களை பார்த்து பூரிக்கிறாயே
என்றனர் போட்டியாளர்கள் ...
ஆம்..உயிரே ..நீயே சிறந்தவள் என
அமைதியானேன் ஆராய்ச்சி முடிவுடன்...
1 comment:
... wow... yes, nila is always the best!!
Post a Comment