
ஓய்வடையா ஓடை நீ
ஒரு நொடியில் நின்றதேன்
தேங்காய் சுமந்தாடும் தென்னையே
ஆடாமல் அயர்ந்ததேன்
சுட்டெரிக்கும் சூரியனே
சுபாவம் மாறி சொலித்ததேன்
மழைக்கரு சுமக்கும் மேகமே
மாம்ரம் கண்டதும் நின்றதேன்
அவசரமாய் சென்ற நான்
அடியாத்தி நின்றதேன்
ஓவியத்தில் ஓரோரமாய் தீட்டியிருந்த
அவள் பெயரினை மனம்படிக்க
அவளை நினைக்க சொல்லி
பின் அது அடம்பிடிக்க
இப்பெயரினை எங்கு பார்த்தாலும்
இமைக்காமல் இருநொடி நிற்பதேன்
ஆண்டுகள் பலவாயின் சளிக்காமல்
அவள் நினைவு இருப்பதேன்....
அன்புடன்,
செல்வேந்திரன்.
3 comments:
///
ஓவியத்தில் ஓரோரமாய் தீட்டியிருந்த
அவள் பெயரினை மனம்படிக்க
அவளை நினைக்க சொல்லி
பின் அது அடம்பிடிக்க
இப்பெயரினை எங்கு பார்த்தாலும்
இமைக்காமல் இருநொடி நிற்பதேன்
ஆண்டுகள் பலவாயின் சளிக்காமல்
அவள் நினைவு இருப்பதேன்....
///
arumaiyeaa irukuda sellu...kelappura poo...anthaa peru ennanu solluda...therinchukurean...
Selva, miga arumai. Ippodhaavadhu sollavum yaar andha peN endRu :-)
Thedi kondu irukirean......... :)
Post a Comment