இன்று மட்டும் எடைகூடி
அசையாமல் நிற்கும் அடர்மரங்கள்
இமை மூடும் சுகம் கூடி
நனைவதால் எனக்கேது குளிர்சுரங்கள்
நீர் கலந்த தேன்
சுவைக்கும் வண்டுகள்
வசை பாடுமென
வாடும் சில மலர்கள்
இரவின் சுகம் கூட்டும்
பாடல்கள் இங்கில்லை
இலையில் உன் மெல்லிசை
காதோரம் ஈர்க்கும் வரை
எப்பொழுதோ சேதங்கள்
ஏற்படித்தி இருந்தாலும்
கவிதையாவது
காதலியின் நினைப்பும்
மழையின் நனைப்பும்
கவனிக்கவோ கலைக்கவோ
யாருமில்லை ...ஆதலாலே
அழகாய் இருக்கிறது
இரவும் மழையும் தனிமையும்