
அண்ணன் மழலையை கொஞ்சும்போது
அன்றைய மழையை கொஞ்சிக்
கவிதை எழுத வருவதில்லை !
உறவுடன் ஒன்றாய் உண்ணும்போது
கொரிக்கும் அணிலின் அழகுகண்டு
கவிதை எழுத வருவதில்லை !
கடுங்குளிரில் முகம்போர்த்தி உறங்காமல்
முகமூட மேகமிலா நிலாக்கண்டு
கவிதை எழுத வருவதில்லை !
ஐந்துநாள் அழுவலக ஐக்கியத்தில்
ஆறாம்நாள் சிந்தித்துச் சிலவரி
கவிதை எழுத வருவதில்லை !
கவிஞனாய் வாழ நினைத்தாலும்
கடமையில் மூழ்கி உழைக்கும்போது
கவிதை எழுத வருவதில்லை !
ஒரு கவிதை எழுத வருவதில்லை !